இரவு நேர பெண்கள் பாதுகாப்பு — ராமேஸ்வரம் பேருந்து பணியாளர்களின் பாராட்டுக்குரிய செயல்


இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பேருந்தில் பயணம் செய்த ஒரு மாணவியை அந்த நேரத்தில் தனியாக இறக்கிவிட வேண்டாம் என்று ஓட்டுநருமான அந்தோணிராஜ், நடத்துநருமான முத்துராமலிங்கம் இருவரும் உறுதியாக முடிவு செய்தனர். மாணவியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பெற்றோர் அல்லது உறவினர் வராமல் மாணவியை இறக்க மாட்டோம் என்று தெளிவாக தெரிவித்தனர்.

உடனே அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு வர சொல்லினர். பெற்றோர் வரும் வரை மாணவியை பேருந்தில் பாதுகாப்பாக அமர வைத்து பார்த்துக்கொண்டனர். சுமார் 15 நிமிடங்களில் மாணவியின் சித்தப்பா வந்ததும், மாணவியை அவரிடம் ஒப்படைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்த மனிதநேயமும், பெண்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கருதிய அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப் பெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த ஓட்டுநர் அந்தோணிராஜ் மற்றும் நடத்துநர் முத்துராமலிங்கம் ஆகியோரை பலரும் புகழ்ந்து வரவேற்றுள்ளனர்.

Popular posts from this blog

வேலூரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – கல்வி, சுயதொழில் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

திடீர் ஆய்வு!!! அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார்

உளுந்தூர்பேட்டை SIPCOT-ல் Pou Chen: தமிழகத்தின் காலணி தொழில்துறையில் புதிய மைல்கல்