Posts

Showing posts from February, 2026

“சென்னையில் பறவைக் காய்ச்சல்: காரணம், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிகள் – முழு தகவல்”

Image
சென்னையில் பறவைக் காய்ச்சல் – மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை சென்னையின் பல பகுதிகளில் சமீபத்தில் காகங்கள் உள்ளிட்ட சில பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் (Avian Influenza – H5N1) பற்றிய எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக பறவைகளில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் நோயுற்ற அல்லது இறந்த பறவைகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே நடக்கும் என்பதால், பொதுமக்கள் அதிகமாக அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு அபாயமா? பொதுவாக இந்த நோய் மனிதர்களுக்கு எளிதில் பரவுவதில்லை. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதும் மிகவும் அரிது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும...

“தமிழ்நாடு ஜவுளி துறைக்கு புதிய ஊக்கம் – மானியம் மற்றும் நிதி அறிவிப்பு முழு விவரம்”

Image
இன்று (6.2.2026) தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி தொழிற்சாலைகளில், நவீன தானியங்கி விசைத்தறி மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 20% மூலதன முதலீட்டு மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்தமைக்கும் மற்றும் இதற்கு ஆண்டுதோறும் ரூ.30.00 கோடி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு செய்தமைக்கும் மற்றும் நூற்புத் தொழிலில் நூற்புக்கு முந்தைய & பிந்தைய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு, 6% வட்டி மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டமைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இன்று (06.02.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.